தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஊராட்சி தலைவர்களுக்கான தனி குறைதீர் கூட்டம் நடத்த வேண்டும்: தலைவர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

காஞ்சிபுரம், அக்.7: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகனிடம், ஊராட்சி தலைவர்களுக்கான தனி குறைதீர் கூட்டம் நடத்த வேண்டும் என்று ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில், கூட்டமைப்பின் தலைவர் அஜய்குமார், செயலாளர் பொன்னா (எ) வெங்கடேசன் ஆகியோர், நேற்று காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி மோகன் சந்தித்து, கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.

Advertisement

அதில், கூறியிருப்பதாவது: தமிழகத்தில் சிறப்பான முறையில் மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றி வரும் தமிழக முதல்வருக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி தலைவர்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். அதே வேளையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 274 கிராம ஊராட்சிகளுக்கான உள்ளாட்சி பிரதிகள் குறை தீர்க்கும் கூட்டம் கடந்த ஓராண்டக நடைபெறவில்லை. இதனால், ஊராட்சி தலைவர்கள் கோரிக்கைகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை நிறைவேற்றுவதில் காலதாமதம் ஏற்படுகிறது. எனவே, மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சி தலைவர்களும் பயன்பெறும் வகையில், தனியாக ஒரு குறை தீர்க்கும் நாள் கூட்டத்தை நடத்த ஆவணம் செய்யுமாறும், காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.

Advertisement