தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கேளம்பாக்கம், படூர் பகுதிகளில் ஓஎம்ஆர் சாலையில் மழைநீர் அகற்றம்

திருப்போரூர், டிச.4: கேளம்பாக்கம், படூர் பகுதிகளில் ஓஎம்ஆர் சாலையில் வழிந்தோடிய மழைநீர் மோட்டார் வைத்து, ஊராட்சி நிர்வாகங்கள் நடவடிக்கையால் அகற்றப்பட்டது. இப்பணிகளை கலெக்டர் சினேகா பார்வையிட்டு, ஆய்வு செய்தார். கடந்த இரு நாட்களாக பெய்து வரும் வடகிழக்குப் பருவமழையின் காரணமாக திருப்போரூர் ஒன்றியத்தில் அடங்கிய கேளம்பாக்கம் ஊராட்சியில் உள்ள நகர், கனக பரமேஸ்வரன் நகர், அஜித்நகர், லட்சுமி அவென்யூ, ராஜேஸ்வரி நகர், சாமுண்டீஸ்வரி நகர், நகர் உள்ளிட்ட பல்வேறு குடியிருப்புகளில் தெருக்களில் மழைநீர் தேங்கியது.

Advertisement

அதேபோன்று, கேளம்பாக்கத்தில் இருந்து கோவளம் செல்லும் சாலையில் உள்ள பெரியகுட்டையில் மழைநீர் தேங்கி முழுவதும் நிரம்பியதால் சாலையில் வெளியேறியது. இதன் காரணமாக மக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். இதையடுத்து கேளம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ராணி எல்லப்பன் தலைமையில், ஊராட்சி பணியாளர்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் தேங்கிய மழை நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். இதேபோல், தையூர் மற்றும் கேளம்பாக்கம் இடையே வீராணம் கால்வாயில் இருந்து வெள்ள நீர் வெளியேறி ஓ.எம்.ஆர்.சாலையில் வழிந்தோடியது. இதனால் கேளம்பாக்கத்தில் இருந்து திருப்போரூர் நோக்கி சென்ற வாகனங்கள் ஓ.எம்.ஆர். சாலையில் ெமதுவாகச் சென்றன. தையூர் ஊராட்சி மன்ற தலைவர் குமரவேல் மற்றும் ஊழியர்கள் வந்து சாலையில் தண்ணீர் தேங்கி இருப்பதை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து திருப்போரூர் ஒன்றியத்தில் அடங்கிய படூர் ஊராட்சியில் உள்ள ஈசா ஏரி நிரம்பி உபரிநீர் வெளியேறியது. இதன் காரணமாக படூரில் ஓ.எம்.ஆர். சாலை முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியது. படூர் ஊராட்சி சார்பில் வெள்ளநீர், மழை, புயல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டு உணவு வழங்கப்பட்டது. படூர் ஊராட்சி மன்ற தலைவர் தாரா சுதாகர் தலைமையில் ஊராட்சி பணியாளர்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் தண்ணீரை வெளியேற்றிம் கால்வாயில் உள்ள அடைப்புகளை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இப்பணிகளை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் சினேகா நேற்று காலை பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது, திருப்போரூர் ஒன்றியக்குழு தலைவர் எல்.இதயவர்மன், திருப்போரூர் வட்டாட்சியர் சரவணன், ஒன்றிய ஆணையாளர் அரிபாஸ்கர் ராவ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Advertisement

Related News