தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கிளாம்பாக்கத்தில் அமைச்சர் ஆய்வு

கூடுவாஞ்சேரி, அக்.1:வண்டலூர் அடுத்த ஊரப்பாக்கம் ஜிஎஸ்டி சாலை ஓரத்தில் கிளம்பாக்கம் பேருந்து நிலையம் உள்ளது. இங்கு வட மற்றும் தென் மாவட்டங்களுக்கு தினம் தோறும் ஆயிரக்கணக்கான அரசு பேருந்துகள், அரசு விரைவு பேருந்துகள் மற்றும் ஆம்னி பேருந்துகள் உட்பட சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு புறநகர் பகுதிகளுக்கு மாநகர பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை தினத்தையொட்டி கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கும் சிறப்பு பேருந்துகள் குறித்து ஆய்வு செய்வதற்காக நேற்று முன்தினம் இரவு திடீரென அமைச்சர் சிவசங்கர் பேருந்து நிலையத்திற்கு வந்து எத்தனை பேருந்துகள் இயக்கப்படுகிறது. எந்தெந்த ஊர்களுக்கு அதிகமான பேருந்துகள் இயக்கப்படுகிறது.

Advertisement

மேலும் பயணிகளின் தேவைகள் சந்திக்கப்படுகிறதா வேறு ஏதேனும் பிரச்சினைகள் உள்ளதா என்றும் எத்தனை பேருந்துகள் ஆன்லைன் மூலமாக புக்கிங் செய்யப்பட்டிருக்கிறது. இன்றைய தினம் இயக்கவிருக்கும் பேருந்துகள் குறித்தும் கேட்டறிந்தார். மேலும், தீபாவளிக்கு பயணிகள் கூடுதலாக பேருந்து நிலையத்திற்கு வர வாய்ப்புள்ளதால் பேருந்துகளை அதிகப்படுத்தவும், மேலும் பயணிகள் எந்தவித சிரமமும் இன்றி தங்கள் சொந்த ஊருக்கு செல்லவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Advertisement