தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ராட்சத அலையில் சிக்கி மாயமான சகோதரிகளின் உடல்கள் கரை ஒதுங்கின: ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் சுற்றுலாவில் இறந்த பரிதாபம்

மாமல்லபுரம்,அக்.1: மாமல்லபுரம் அருகே கடலில் குளித்த போது, ராட்சத அலையில் சிக்கி மாயமான சகோதரிகளின் உடல், 2 நாட்களுக்கு பிறகு கரை ஒதுங்கின. சென்னை பெரம்பூர் சக்கரபாணி தோட்டம் அகரம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர், உறவினர்கள் 17 பேருடன் ஒரு வேனில் மாமல்லபுரம் அருகே உள்ள சூளேரிக்காடு கடற்கரைக்கு 2 நாட்களுக்கு முன் சென்றார். அங்கு, அனைவரும் கடலில் இறங்கி குளியல் போட்டுள்ளனர்.

Advertisement

அப்போது, திடீரென எழுந்த ராட்சத அலையில் சிக்கி வெங்கடேசன் (37). அவரது, மகள்கள் கார்த்திகா (17), துளசி (16) மற்றும் ஹேமாவதி (37) ஆகிய 4 பேரும் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர்.

அப்போது, அங்கு நின்று கொண்டிருந்த மீனவர்கள் விரைந்து செயல்பட்டு ஹேமாவதியை மட்டும் உயிருடன் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். ராட்சத அலையில் சிக்கிய தந்தை, 2 மகள்கள் என 3 பேரும் ஆழமான பகுதிக்குச் சென்றதால் அவர்களை மீட்க முடியவில்லை. பின்னர், சிறிது நேரத்தில் வெங்கடேசன் உடல் இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. ராட்சத அலையில் இழுத்து செல்லப்பட்டு மாயமான சகோதரிகளான கார்த்திகா, துளசி இருவரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், மீட்க முடியவில்லை.

கடந்த 2 நாட்களாக தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில், கடலோர காவல் படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் நேற்று காலை சூளேரிக்காடு பகுதிக்கு வரவழைக்கப்பட்டு, மீனவர்கள் உதவியுடன் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வந்த நிலையில், சகோதரிகளின் உடல் சூளேரிக்காடு கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்துக்கு அருகே அடுத்தடுத்து கரை ஒதுங்கியது. தகவலறிந்த, மாமல்லபுரம் போலீசார் விரைந்து வந்து, உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement