தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கடும் பனிப்பொழிவு காரணமாக குளிர்ப்பிரதேசம் போல் மாறிய காஞ்சிபுரம் பகுதி: mவாகன ஓட்டிகள் அவதி mவீடுகளில் முடங்கிய பொதுமக்கள்

காஞ்சிபுரம், பிப்.8: காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று காலை கடும் பனிப்பொழிவின் காரணமாக, அப்பகுதிகள் முழுவதும் குளிர் பிரதேசம் போல் மாறியது. இதனால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர். மேலும், பொதுமக்கள் வெளியே வரமுடியாமல் வீடுகளுக்குள்ளே முடங்கினர். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் முடிவடைந்தநிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் மிதமான மழை பெய்தது. மழைக்காலம் முடிவடைந்து பொதுவாக வறண்ட வானிலை நிலவிவரும்நிலையில், நேற்று காலை காஞ்சிபுரத்தில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது.

Advertisement

தை மாதம் முடிவடைய உள்ளநிலையில் பனிப்பொழிவு காலமான மார்கழி மாதத்தைப்போல் காஞ்சிபுரம் நகரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று காலை சுமார் 8.30 மணி வரை கடும் பனிப்பொழிவு காணப்பட்டது. காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கோனேரிக்குப்பம், ஏனாத்தூர், ஓரிக்கை, தாமல், பரந்தூர், வையாவூர், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, பொன்னேரிக்கரை, ரயில் நிலையம், அய்யங்கார்குளம், புஞ்சை அரசன் தாங்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் திடீரென குளிர் பிரதேசமான ஊட்டியைபோல் மாறியது. இதனால், செவிலிமேடு பாலாறு மேம்பாலம் பகுதியில் எதிரே வரும் வாகனங்கள் சிறிது தூரத்தில் மட்டுமே தெரிந்ததால் வாகன ஓட்டிகள் சாலையில் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே சிரமத்துடன் ஓட்டிச்சென்றனர். இதனிடையே, பெதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரமுடியாமல் முடங்கியதால் அவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

Advertisement

Related News