தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

மதுராந்தகம் அருகே போலி மருத்துவர் கைது

மதுராந்தகம், ஆக. 11: மதுராந்தகம் அருகே 15 ஆண்டுகளுக்கு மேலாக மருத்துவம் படிக்காமல் 12ம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு, மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவர் கைது செய்யப்பட்டார். மதுராந்தகம் அருகே கருங்குழி அடுத்த மேலவளம்பேட்டையில், மருத்துவம் படிக்காத போலி மருத்துவர் ஒருவர், அவரது வீட்டில் கிளினிக் வைத்து சிகிச்சை அளித்து வந்துள்ளார். இது குறித்த காஞ்சிபுரம் திட்டமிட்ட குற்ற தடுப்பு நுண்ணறிவு பிரிவு அலுவலகத்துக்கு புகார் வந்தது. இதனை அடுத்து, நுண்ணறிவுப் பிரிவு ஆய்வாளர் தலைமையில், மேலவளம் பேட்டையில் உள்ள கிளினிக்கில் நேற்று முன்தினம் திடீர் ஆய்வு செய்தனர்.

அப்போது, மூதாட்டி ஒருவருக்கு கிளினிக்கில் மருத்துவம் பார்த்துக் கொண்டிருந்த பிரகாஷ் (50) என்பவரை போலீசார் பிடித்தனர். பின்னர் நடத்திய விசாரணையில், மேலவளம்பேட்டையை சேர்ந்த பிரகாஷ். இவர் 12ம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு மருத்துவம் பார்த்து வந்ததாக தெரிந்தது. மேலும், மருத்துவம் படிக்காமல், கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக, மதுராந்தகம் அடுத்த புழுதிவாக்கம் மற்றும் கருங்குழி பகுதியில் கிளினிக் நடத்தி, நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்ததும் விசாரணையில் தெரிந்தது. இதனை அடுத்து, மாவட்ட மருத்துவ ஊரக நலப் பணிகள் இணை இயக்குனர் மலர்விழி கொடுத்த புகாரின் பேரில் மதுராந்தகம் போலீசார் பிரகாஷ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.