தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விபத்தில் மூளைச்சாவு ஏற்பட்டு இறந்த வாலிபரின் உடல் உறுப்புக்கள் தானம்: அரசு சார்பில் வட்டாட்சியர் மரியாதை

திருப்போரூர், ஆக.11. திருப்போரூரை அடுத்த தையூர் ஊராட்சிக்குட்பட்ட கோமான் நகர் பகுதியை சேர்ந்தவர் சேட்டு. இவருடைய மகன் பாண்டி மதுரை (எ) சூர்யா (35). அதே பகுதியைச் சேர்ந்த இவருடைய நண்பர் காந்தா (35) இருவரும் கடந்த, 6ம் தேதி மோட்டார் சைக்கிளில், கேளம்பாக்கத்திலிருந்து திருப்போரூர் நோக்கி பழைய மாமல்லபுரம் சாலையில் தங்களது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை பாண்டி மதுரை (எ) சூர்யா ஓட்ட அவருடைய நண்பர் பின்னால் அமர்ந்து சென்று கொண்டிருந்தார்.

Advertisement

தையூர் கோமான் நகர் பகுதிக்கு செல்வதற்காக வலதுபுறம் திரும்ப முயற்சித்த போது, அதே திசையில் கேளம்பாக்கத்தில் இருந்தது திருப்போரூர் நோக்கி ராமகிருஷ்ணன் என்பவரது கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இருவரும் தூக்கியெறியப்பட்டனர். இதில், சூர்யாவுக்கு பலத்தகாயம் ஏற்பட்டது. உடன் வந்த நண்பர் காந்தாவுக்கு லேசான காயம் மட்டும் ஏற்பட்டது. உடனடியாக சூர்யா செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு ஆபத்தான நிலைமையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று முன்தினம் மூளைச்சாவு அடைந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து பெற்றோர் சம்மதத்துடன் 2 இதய வால்வுகள், 2 கண்கள், கல்லீரல், 2 சிறுநீரகங்கள் உள்ளிட்ட 7 உறுப்புகள் தானமாக பெறப்பட்டன. இதைத்தொடர்ந்து சூர்யாவின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று காலை 10 மணியளவில் அரசு சார்பில் அவருடைய உடலுக்கு திருப்போரூர் வட்டாட்சியர் சரவணன், தையூர் ஊராட்சிமன்ற தலைவர் குமரவேல், தையூர் கிராம நிர்வாக அலுவலர் மோகன் மற்றும் அரசு ஊழியர்கள் சூர்யா உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

Advertisement