தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

மானாம்பதிக்கு கூடுதல் மாநகர பேருந்து இயக்க கோரிக்கை

 

திருப்போரூர், ஆக.5: சென்னை அடையாறில் இருந்து திருப்போரூரை அடுத்துள்ள மானாம்பதி கிராமம் வரை தடம் எண் 102 எக்ஸ் என்ற மாநகரப் பேருந்து இயக்கப்படுகிறது. இது காலை மற்றும் மாலை ஆகிய இரு நேரங்களில் இந்த பேருந்து இயக்கப்படுகிறது. இதில் மானாம்பதி, குண்ணப்பட்டு, சிறுதாவூர், ஆமூர், அகரம், உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களின் கிராமங்களில் இருந்து இந்த பேருந்து மூலமே சென்னையின் முக்கிய பகுதியை அடைவதற்கு இந்த பேருந்தை பயன்படுத்துகின்றனர்.

குறிப்பாக, உயர்கல்வி பயில கல்லூரிகளுக்கு செல்வோர், சென்னை அரசு பொது மருத்துவமனை, தலைமைச் செயலகம், உயர்நீதிமன்றம் போன்ற இடங்களுக்கு செல்வோரும், பல்வேறு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் செல்வோரும் இந்த பேருந்தை பயன்படுத்துகின்றனர்.

தற்போது, கணிசமாக மக்கள் தொகை வளர்ச்சி ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது இரு நடைகள் இயக்கப்படும் பேருந்தை நான்கு பேருந்துகள் மூலமாக 10 நடைகள் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஆகவே, மாநகரப் போக்குவரத்து அதிகாரிகள் இந்த வழித்தடத்தை ஆய்வு செய்து இந்த தடத்தில் கூடுதல் மாநகரப் பேருந்துகளை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.