தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நாய்கள் கடித்து குதறிய பெண் மயில் உயிருடன் மீட்பு

மாமல்லபுரம், செப். 3: மாமல்லபுரத்தில் இருந்து கொக்கிலமேடு செல்லும் கல்பாக்கம் சாலையையொட்டி தனியார் ரிசார்ட் உள்ளது. இந்த ரிசார்ட்டின் நுழைவாயில் பகுதியில் நேற்று மாலை இரை தேடி வந்த பெண் மயில் ஒன்றை அப்பகுதியில் சுற்றித் திரிந்த நாய்கள் துரத்தி சென்று கடித்து குதறின. பலத்த காயங்களுடன் நாய்களிடமிருந்து தப்பிய பெண் மயில் ரிசார்ட்டின் பாதுகாப்பு கம்பி வேலியில் சிக்கி உயிருக்கு போராடியது. பெண் மயில் கத்தும் சத்தம் கேட்டு அருகில் இருந்த ரிசார்ட் பணியாளர்கள் ஓடி வந்து, அங்கு சுற்றித் திரிந்த நாய்களை விரட்டினர். மேலும், மாமல்லபுரம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

Advertisement

அதன்பேரில், தீயணைப்பு நிலைய அலுவலர் இன்பராஜ், முதன்மை தீயணைப்பாளர் ரமேஷ் பாபு மற்றும் வீரர்கள் விரைந்து வந்து, பாதுகாப்பு வேலியில் சிக்கிய பெண் மயிலை பத்திரமாக உயிருடன் மீட்டு, முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர், தீயணைப்பு அதிகாரிகள் பெண் மயிலை திருக்கழுக்குன்றம் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

Advertisement