தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருமண நிச்சயதார்த்தத்திற்கு சென்றபோது பஸ் கவிழ்ந்து 3 பேர் படுகாயம்

 

Advertisement

குன்றத்தூர், டிச.1: திருமண நிச்சயதார்த்தத்திற்கு சென்றபோது பஸ் கவிழ்ந்ததில் 3 பேர் படுகாயம் அடைந்தனர். சென்னை மணலி, மாத்தூர், 36வது தெருவை சேர்ந்தவர் முகமது ஆரிப் (50). இவர், தனது மகன் யூசுப் என்பவருக்கு திருமண நிச்சயதார்த்தம் செய்வதற்காக நேற்று தனது உறவினர்கள் 18 பேருடன் மணலியில் இருந்து பேருந்து ஒன்றில் தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம் நோக்கி சென்று கொண்டிருந்தார். பேருந்தை மணலியைச் சேர்ந்த கணேஷ் (37) என்பவர் ஓட்டினார். பேருந்து தாம்பரம்- மதுரவாயல் புறவழிச்சாலையில் பல்லாவரம் அடுத்த திருநீர்மலை அருகே வந்தபோது, எதிர்பாராத விதமாக முன் பக்க டயர் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து, ஒரு பக்கமாக சாய்ந்தது. இதனால், பேருந்தில் இருந்த சுலேகா (25), யூசுப் (35), ஹாஸ்மா (30) உள்ளிட்ட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதுகுறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், படுகாயமடைந்த 3 பேரையும் உடனடியாக மீட்டு, சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து, மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Related News