தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

புதுகையில் ஜூலை 18ம் தேதி முதல் 27 வரை கம்பன் பொன்விழா

 

புதுக்கோட்டை, ஜூன் 30: புதுக்கோட்டை கம்பன் கழகம் சார்பில் வரும் ஜூலை 18 முதல் 27ஆம் தேதி வரை 10 நாட்கள், 50ஆவது ஆண்டு கம்பன் பொன் பெருவிழா நடைபெறவுள்ளது.

புதுக்கோட்டையில் நேற்று நடைபெற்ற கம்பன் கழகத்தின் விழாக் குழுக் கூட்டத்துக்குப் பிறகு, பொன் பெருவிழாவின் தேதியை கம்பன் கழகத்தின் தலைவர். ராமச்சந்திரன் நேற்று அறிவித்தார்.விழா மங்கலம், விருதளிப்பு, பட்டிமன்றம், வழக்காடு மன்றம், கவிதைச்சோலை, சுழலும் சொல்லரங்கம், நற்றமிழ் முற்றம், கவியரங்கம், ஏழில் உரை, பரிசளிப்பு, கம்ப நாட்டியம், பாட்டு மன்றம், சந்திப்பு வளையம், கனல் உரை, கம்பனிசை அரங்கம் உள்ளிட்ட பல்வேறு வகையான நிகழ்ச்சிகளை வழக்கம்போல 10 நாட்களும் வடக்கு ராஜவீதியிலுள்ள நகர்மன்றத்தில் நடத்திட முடிவு செய்யப்பட்டது. கம்பன் கழகத்தின் செயலர் சம்பத்குமார் மறைவுக்குப் பிறகு, கூடுதல் செயலராக இருந்த புதுகை பாரதி, புதுக்கோட்டை கம்பன் கழகத்தின் புதிய செயலராக ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார். 50ஆம் ஆண்டு பொன் பெருவிழாவை முன்னிட்டு, வரும் ஜூலை 7ஆம் தேதி மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பல்வேறு போட்டிகளை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Related News