தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கள்ளக்குறிச்சி விஷ சாராய பலி எதிரொலி: தொடர் கள்ளச்சாராய வேட்டையில் 13 பேர் கைது 600 லிட்டர் சாராயம் அழிப்பு

திருவண்ணாமலை, ஜூன் 23: கள்ளக்குறிச்சியில் விஷ சாராயத்தால் 50க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம் எதிரொலியாக, திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர்ந்து 3வது நாளாக கள்ளச்சாராய வேட்டையில் போலீசார் ஈடுபட்டனர். அதில், 600 லிட்டர் கள்ளச்சாராயம் அழிக்கப்பட்டது. கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து, 50க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே, மாநிலம் முழுவதும் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபடுவோரை கண்டறிந்து கைது செய்யும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement

அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் எஸ்பி கார்த்திகேயன் உத்தரவின் பேரில், கலால் பிரிவு டிஎஸ்பி ரமேஷ் ராஜ் தலைமையில் தொடர்ந்து மூன்றாவது நாளாக நேற்றும் மாவட்ட முழுவதும் கள்ளச்சாராய வேட்டையில் போலீசார் ஈடுபட்டனர். அதன்படி, திருவண்ணாமலை தண்டராம்பட்டு செங்கம் தானிப்பாடி ஜவ்வாது மலை புகலூர் செய்யாறு உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று கள்ளச்சாராய வேட்டை நடந்தது அதில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், 600 லிட்டர் கள்ளச்சாராயம் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது. செங்கம் அடுத்த கட்டர் அணை கிராமத்தில், வீட்டுக்கு அருகிலும் கரும்பு தோட்டங்களிலும் லாரி டியூப்களில் பதுக்கி வைத்திருந்த 130 லிட்டர் கள்ளச்சாராயம்பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதே போல், கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை பகுதியில் இருந்து கள்ளச்சாராயம் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு கொண்டுவரப்படுகிறதா எனவும் கண்காணிக்கப்படுகிறது அதேபோல் ஜவ்வாது மலை பகுதியில் கள்ளச்சாராய ஊறல் தொடர்பாக கிடைத்த தகவலின் பேரில், அங்கு போலீசார் முகாமிட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement

Related News