தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஜார்கண்ட் சட்டப்பேரவையில் அமளி: 18 பாஜ எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட்

ராஞ்சி, ஆக.2: ஜார்கண்ட் சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்ட 18 பாஜ எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு அவை காவலர்களால் வெளியேற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஜார்கண்ட் சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் எதிர்கட்சி எம்எல்ஏக்களின் கேள்விகளுக்கு முதல்வர் ஹேமந்த் சோரன் பதிலளிக்காததை கண்டித்து உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து அவை காவலர்கள் மூலம் அவர்கள் வெளியேற்றப்பட்டனர். ஆனால் அவர்கள் சட்டமன்ற வளாகத்தில் இருந்து வெளியேறாமல் நள்ளிரவு வரை நுழைவு வாயில் அருகே தங்கி இருந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று காலை அவை தொடங்குவதற்கு முன்பே கூச்சல் குழப்பம் நிலவி வந்தது. அவை தொடங்கியவுடன் பாஜ எம்எல்ஏக்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து முழக்கமிட்டனர்.

Advertisement

முதல்வர் ஹேமந்த் சோரன் ராஜினாமா செய்ய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினார்கள். மேலும் அவையில் சில ஆவணங்களை அவர்கள் கிழித்து எறிந்தனர். தொடர்ந்து அமளி நிலவியதால் சபாநாயபர் ரபிந்த்ரநாத் மாக்டோ பாஜ எம்எல்ஏக்கள் 18 பேரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். சஸ்பெண்ட் செய்த பின்னரும் அவர்கள் அவையில் இருந்து வெளியேறாததால் அவை காவலர்கள் மூலமாக அவர்கள் வெளியேற்றப்பட்டனர். இன்று பிற்பகல் 2மணி வரைக்கும் 18 எம்எல்ஏக்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

Related News