தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பெருமாள் கோயிலில் நகை திருட்டு

திருக்கோவிலூர், ஜூன் 7: பெருமாள் கோயிலில் நகை திருடிய பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த மணலூர்பேட்டையில் பிரத்யோக வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயில் மிகவும் பழமையான கோயில் என்பதால் தமிழ்நாடு இந்து சமய அறநிலைய துறை சார்பில் கடந்த மூன்று மாதத்திற்கு முன் சுமார் ரூ.1.25 கோடி நிதி ஒதுக்கப்பட்டு கும்பாபிஷேக பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. கோயில் அர்ச்சகராக ஜெகதீஷ் என்பவர் கடந்த 10 வருடமாக பணியாற்றி வருகிறார். கடந்த 4ம் தேதி வழக்கம் போல் கோயிலை பூட்டிவிட்டு சென்றார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது, தேவி பூதேவி கழுத்தில் இருந்த தாலியில் தங்கத்திலான பொட்டு காணாமல் போய் இருப்பது தெரிய வந்தது.

Advertisement

இது குறித்து கோயில் செயல் அலுவலர் வேல்விழி, மணலூர்பேட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் கோயில் வளாகத்தில் இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது சிசிடிவி கேமிரா ஆய்வு செய்தபோது அதிகாலை அர்ச்சகர் ஜெகதீஷ் நெய் வைத்திய பூஜை செய்துவிட்டு கோயில் வளாகத்தில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கிக் கொண்டிருக்கும்போது திடீரென ஒரு பெண் உள்ளே நுழைந்து தாயார் கழுத்தில் இருந்த நகையை எடுத்துச் செல்வது பதிவாகி இருந்தது. இதை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிந்து பக்தர் போல் நடித்து தாயார் கழுத்தில் இருந்த நகையை அபேஸ் செய்த பெண்ணை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Related News