தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அஞ்சுகிராமம் அருகே துணிகரம் பேராசிரியர் வீட்டில் கதவை உடைத்து நகை, பணம் கொள்ளை

 

Advertisement

அஞ்சுகிராமம், பிப்.2: குமரி மாவட்டம் அழகப்பபுரத்தை சேர்ந்தவர் ஞானப்பொன் மனைவி ராஜசெல்வம் (35). இவர் கல்லூரி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். ஞானப்பொன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். ராஜசெல்வம் கல்லூரிக்கு செல்ல வசதியாக அகஸ்தீஸ்வரம் அருகே உள்ள இவரது தந்தை வீட்டில் தங்கி வேலைக்கு சென்று வருகிறார். வாரம் இரு முறை வீட்டிற்கு வந்து பார்த்து விட்டு செல்வது வழக்கம்.

இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டிற்கு வந்து விட்டு இரவு தந்தை வீட்டிற்கு சென்று விட்டார். நேற்று காலை வந்து பார்த்தபோது வீட்டில் பூட்டு உடைக்கப்பட்டு கதவும் உடைக்கப்பட்டு கிடந்தது. அதிர்ச்சி அடைந்தவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டின் உள்ளிருந்த பீரோவை உடைத்து ஒரு பவுன் கம்மல் மற்றும் ஒன்றரை பவுன் தங்க மோதிரம் என இரண்டரை பவுன் நகை மற்றும் ரொக்கம் 5000, 3000 மதிப்புள்ள ஸ்பீக்கர், 2000 மதிப்புள்ள டார்ச் லைட் ஆகியவை திருடு போனது தெரிய வந்தது. இவற்றின் மொத்த மதிப்பு 85 ஆயிரம் ஆகும்.

இது குறித்து இராஜசெல்வம் அஞ்சுகிராமம் போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனிப்படை போலீசார் அந்தப் பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தக் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது பழைய குற்றவாளிகளா? அல்லது புதியவர்களா? வட மாநிலத்தைச் சேர்ந்தவர்களா? என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Related News