தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோடை உழவு செய்து பயன் பெற அழைப்பு

 

Advertisement

தர்மபுரி, மே 24: பாப்பிரெட்டிப்பட்டி வேளாண்மை உதவி இயக்குனர் அருணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:  விவசாயிகள் தற்போது பெய்து வரும் கோடை மழையை பயன்படுத்தி, கோடை உழவு செய்து மண் வளத்தை பாதுகாத்து பயன்பெற வேண்டும். கோடை உழவை பயன்படுத்தி, மண்ணை புழுதி நிலம் ஆக்க வேண்டும். அவ்வாறு செய்வதனால் புழுதியானது மண்ணின் மேல் ஒரு போர்வை போல் மூடி, கீழே உள்ள நீர் ஆவியாகாமல் சேமிக்கப்படுகிறது.

மண்ணில் உள்ள பெரிய கட்டிகள் உடைக்கப்பட்டு, நிலம் நன்கு பண்படுத்தப்படுகிறது. இதனால், மழை பெய்வதற்கு முன்பே பருவ விதைப்பு மேற்கொள்வதற்கு வசதியாக இருக்கும். கோடை உழவு செய்வதனால் மண் அரிப்பு ஏற்படாமல் மழைநீர் முழுவதும் உறிஞ்சப்படுகிறது. மண்ணில் மறைந்து வாழும் பயிர்களை சேதப்படுத்தும் பூச்சி இனங்களின், கூண்டு புழுக்கள் வெளி கொண்டு வரப்பட்டு அழிக்கப்படுகின்றன.

இதனால், பூச்சி -பூஞ்சான நோய் தாக்கத்திலிருந்து அடுத்து பயிரிடப்படும் பயிர்கள் பாதுகாக்கப்படுகின்றன. மேலும், மண் அரிமானம் தடுக்கப்படுவதோடு மண்ணில் உள்ள சத்துக்கள் பாதுகாக்கப்படுகிறது. மழை நீரும் சேமிக்கப்படுகிறது. எனவே, பாப்பிரெட்டிப்பட்டி வட்டார விவசாயிகள் தற்போது கோடை உழவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Related News