தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சிறுதானிய இயக்கத்தில் பயன் பெற அழைப்பு

 

Advertisement

நாமக்கல், மே 26: நாமக்கல் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் கலைச்செல்வி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நாமக்கல் மாவட்டத்தில், காரீப் மற்றும் ராபி பருவத்தில் சராசரியாக 80 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் சிறு தானியங்கள் மற்றும் குறு தானியங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. தமிழ்நாடு அரசால், சிறுதானிய சிறப்பு மண்டலம் 1-ஆக அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் நாமக்கல் மாவட்டம் ஒரு அங்கமாக உள்ளது. இந்த ஆண்டு சிறுதானியங்களின் பரப்பு, உற்பத்தி ஆகியவற்றை அதிகரிக்கும் வகையில் தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் திட்டம் நாமக்கல் மாவட்டத்தில் செயல்படுத்தப்படுகிறது. சிறுதானிய இயக்கம் திட்டத்தின் கீழ், குறுந்தானிய சாகுபடிக்கு விவசாயிகளுக்கு பின்னேற்பு மானியமாக உழுதல், களையெடுத்தல், பயிா்பாதுகாப்பு மருந்து தெளித்தல், பறவை விரட்டுதல் ஆகிய உழவியல் செலவினங்களுக்கு ஒரு ஏக்கருக்கு பின்னேற்பு மானியமாக ரூ.1600 வழங்கப்படுகிறது.

மாற்று பயிர் சாகுபடி திட்டத்தின் மூலம் சிறுதானிய சாகுபடி பரப்பை அதிகரிக்கும் பொருட்டு சிறுதானிய விதைகள், திரவ உயிர் உரங்கள், நுண்ணூட்ட கலவை, அறுவடை மானியம் என ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக ஏக்கருக்கு ரூ.1250 அல்லது 50 சதவீத மானியத்தில் இடுபொருள்கள் வழங்கப்பட உள்ளன.

இத்திட்டத்தில் அனைத்து விவசாயிகளும் பயன்பெற தகுதியுடையவர் ஆவர். சிறு, குறு விவசாயிகள், ஆதி திராவிட பழங்குடியின மற்றும் பெண் விவசாயிகளுக்கு இந்த திட்டத்தின் கீழ், முன்னுரிமை வழங்கப்படும். விவசாயிகள், உழவன் செயலி மூலமாக பதிவு செய்வதன் மூலம் முன்னுரிமை அடிப்படையில் பயன்பெறலாம். மேலும், இத்திட்டத்தினை பற்றி முழு விவரம் அறிய விவசாயிகள் சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குநா்களை அணுகி பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement

Related News