தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மதுரை ரயில் நிலையத்தில் தீவிர ரோந்து அவசியம்

மதுரை, ஜூன் 5: மதுரை ரயில் நிலையத்தை மையமாக கொண்டு, சென்னை, டில்லி, மும்பை, கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் ரயில்கள் சென்று வருகின்றன. மதுரை ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு கிழக்கு மற்றும் மேற்கு நுழைவாயில்களில் டிக்கெட் எடுக்கும் வசதிகளை ஏற்படுத்திள்ளனர். எந்த நேரமும் பயணம் செய்யும் வசதிகளை கொண்டுள்ளதால், மதுரை ரயில் நிலையத்திற்கு வந்து செல்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ரயில்களில் செல்ல வரும் பயணிகள் பலரும் கிழக்கு நுழைவாயில் வழியாக வந்து செல்கின்றனர். ரயிலுக்காக பலர் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. பலர் கிழக்கு நுழைவாயில் பகுதியில் காத்திருக்கின்றனர்.

Advertisement

இதுபோன்ற நேரங்களில் சமூக விரோதிகள் பலர் ரயில் பயணிகள் போல நடித்து பொதுமக்களிடம் இருந்து செல்போன், பணத்தை திருடிச் செல்கின்றனர். இதனால் பயணத்திற்கு வரும் நபர்கள் அவதிப்படுகின்றனர். எனவே, ரயில்வே போலீசார் இரவு நேரத்தில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என பயணிகள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது. இதற்காக ரயில்வே போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் ரோந்து பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement

Related News