தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோல்டுவின்ஸ் - உப்பிலிபாளையம் வரை உயர் மட்ட சாலை பணிகள் ஆய்வு

 

Advertisement

கோவை, மே 8: கோவை மாவட்ட சிறப்பு திட்டங்கள் கோட்டத்தின் கீழ் அவிநாசி சாலையில் கோல்டுவின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை நடைபெற்று வரும் உயர் மட்ட சாலை பணிகளை கண்காணிப்புப் பொறியாளர் ஆர்.சரவணன் அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட உள் தணிக்கை குழுவினரால் ஆய்வு செய்யப்பட்டது. கோவை திட்டங்கள் கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில் பணியின் முன்னேற்றம் குறித்து உள் தணிக்கை குழுவினரால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இப்பாலப்பணி தற்போது 70 சதவீதம் முடிவடைந்துள்ளது. இந்த உயர்மட்ட சாலையில் ஏறுதளம், இறங்குதளம் அமைக்கப்பட்ட வேண்டிய 8 இடங்களில் 7 இடங்களில் தற்போது பணி நடைபெற்று வருகிறது. இதற்கான நில ஆர்ஜித பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நில உடமைதாரர்களுக்கு இழப்பீட்டு வழங்கப்பட்டு வருகிறது. டிசம்பர் 2024க்குள் பணியை முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பின்பு வேலை நடைபெறும் அவிநாசி சாலையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. உப்பிலிபாளையத்தில் அமைக்கப்பட்டு வரும் சாய்வு தளத்தின் அளவுகள் சரிபார்க்கப்பட்டது.

விமான நிலைய இறங்குதள தூண்களில் அதிநவீன கருவிகளை கொண்டு திறன் அறியும் சோதனை மேற்கொள்ளப்பட்டன. அதன்பின், இறங்கு தளத்திற்காக அமைக்கப்பட்டு வரும் ரெயின் போர்ஸ்ட் எர்த் வால் அளவுகள் சரிபார்க்கப்பட்டன. பின்பு தென்னம்பாளையத்தில் ஓடுதளத்தின் பகுதிகளை தயாரிக்கும் களத்திற்குச் சென்று சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் திருப்பூர் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு, கோட்டப்பொறியாளர் ஜே.கே ரமேஷ் கண்ணா, சிறப்பு திட்ட கோட்ட பொறியாளர் வை.சமுத்திரக்கனி, உதவிக்கோட்ட பொறியாளர்கள் மற்றும் உதவிப்பொறியாளர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

Advertisement