தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உயர்மட்ட பாலம் கட்டுமான பணிகள் ஆய்வு

 

Advertisement

கோபி, மே 4: கோபி அருகே உள்ள எரங்காட்டூர், பெருமுகை உள்ளிட்ட பகுதியில் நடைபெற்ற வரும் சாலை விரிவாக்கம், உயர்மட்ட பாலம் கட்டுமான பணிகளை நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் தலைமையிலான உள் தணிக்கை குழுவினர் ஆய்வு செய்தனர்.கோபி அருகே உள்ள கள்ளிப்பட்டி பெருமுகை ஊராட்சியில் எரங்காட்டூர் - தொட்டகோம்பை சாலையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் 3 கோடியே 86 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் உயர்மட்ட பாலம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது.

அதேபோன்று டி.என்.பாளையம், நாயகன் சாலை முதல் வாய்க்கால் ரோடு வரை 2 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் சசிக்குமார் தலைமையிலான உள் தணிக்கை குழு ஈரோடு நெடுஞ்சாலைத்துறை நபார்டு மற்றும் கிராம சாலைகளில் நடைபெற்று வரும் பணிகள் மற்றும் முடிவுற்ற பணிகளை ஆய்வு செய்ய அரசு உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து உள் தணிக்கை குழுவினர் எரங்காட்டூரில் கட்டப்பட்டு வரும் உயர்மட்ட பாலத்தின் தரம், கனம், அகலம் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். அதேபோன்று டி.என்.பாளையம் நாயகன் சாலையிலும் சாலையின் நீள, அகலம், தரம் குறித்து ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது தர்மபுரி நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்ட பொறியாளர் நாகராஜ், கோட்ட பொறியாளர் முருகேசன், நெடுஞ்சாலைத்துறை தரக்கட்டுப்பாடு அலகு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement

Related News