தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

267 பள்ளி வாகனங்களில் ஆய்வு

 

Advertisement

அந்தியூர், மே 27: ஈரோடு மாவட்டம் அந்தியூர் பருவாச்சியில் செயல்படும் தனியார் பள்ளி வளாகத்தில் பள்ளி பேருந்துகளில் ஆய்வு நடைபெற்றது.

அந்தியூர் பவானி தாலுகாவில் உள்ள 35 தனியார் பள்ளிகளின் 267 பள்ளி வாகனங்கள் நேற்று பருவாச்சியில் செயல்படும் தனியார் பள்ளி வளாகத்தில் ஆய்வுக்கு கொண்டு வரப்பட்டது. கோபிசெட்டிபாளையம் சார் ஆட்சியர் சிவானந்தம் தலைமையில் பவானி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் பள்ளிக்கல்வித்துறைச் சேர்ந்த அதிகாரிகள் கொண்ட குழு தணிக்கை செய்தனர்.

அப்போது, பள்ளி வாகனங்களில் அவசரகால வழி, கண்காணிப்பு கேமராக்கள், வேக கட்டுப்பாட்டு கருவி, ஜிபிஆர்எஸ் கருவி, அதன் செயல்பாடுகள், முதலுதவி பெட்டி மற்றும் தீயணைப்பான் உள்ளிட்ட அரசு வகுத்துள்ள 16 வழிமுறைகள் சரியாக கடைபிடிக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்தனர்.

ஆய்வின் போது 10 வாகனங்களில் குறைபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றிற்கு உடனடியாக நோட்டீஸ் வழங்கிய வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள், அவற்றை சரி செய்த பின்பு மீண்டும் தணிக்கைக்கு உட்படுத்த வாகன ஓட்டுநர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்திற்கு அறிவுறுத்தினர். தொடர்ந்து பள்ளி வாகன ஓட்டுனர்களுக்கு முதலுதவி பயிற்சி அளிக்கப்பட்டது.

Advertisement