தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பொக்காபுரம் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளியில் ஆய்வு

 

Advertisement

ஊட்டி, ஜூன் 30: ஊட்டி வட்டம், பொக்காபுரம் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளியில் தேசிய பழங்குடியினர் ஆணைய உறுப்பினர் ஜடோத்து ஹுசைன் ஆய்வு மேற்கொண்டார். பொக்காபுரம் அரசு உண்டு உறைவிட பள்ளியில் உள்ள ஆய்வகம், நூலகம் மற்றும் ஸ்மார்ட் வகுப்பு அறை, சமையில் அறை மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்களின் விடுதியின் அடிப்படை வசதிகளை உள்ளிட்டவற்றை தேசிய பழங்குடியினர் ஆணைய உறுப்பினர் ஜடோத்து ஹுசைன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பள்ளி மாணவர்களுக்கு ரெயின் கோட்டுகளை வழங்கியும், பசுமை படையின் சார்பில், நடத்தப்பட்ட ஒவிய போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணாக்கர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

பின்னர் பள்ளியில் கடந்த 2023-24 மற்றும் 2024-25 ஆகிய வருடங்களில் தொடர்ந்து 10ம் வகுப்பில், 100 சதவீத தேர்ச்சி பெற்ற பழங்குடியின பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தும், நாவா சங்கம் சார்பில் குழந்தைகள் நிதி திட்டத்தின் கீழ் 29 பள்ளி மாணவர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம், 2 டிப்ளமோ டிகிரி மாணவ, மாணவியர்களுக்கு தலா ரூ.3 ஆயிரம் வீதம், 2 கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் மற்றும் 1 கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு ரூ.10 ஆயிரம் வீதம், என மொத்தம் 34 நபர்களுக்கு கல்வி உதவித்தொகையாக ரூ.84 ஆயிரத்திற்கான காசோலையினை வழங்கியும் பழங்குடியினர் மாணவ, மாணவியிர்களின் கலைநிகழ்ச்சிகளை பார்வையிட்டார். நிகழ்ச்சியில் தேசிய பழங்குடியினர் ஆணைய இயக்குநர் கல்யாண் ரெட்டி, தனிச்செயலாளர் அசோக்குமார் லக்கரசு, முதுலை புலிகள் காப்பகம் துணை இயக்குநர் அருண், ஊட்டி ஆர்டிஒ சதீஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement

Related News