தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட இடங்களில் தொழிற்பேட்டை

நாமக்கல், ஜூலை 6: தமிழ்நாடு விவசாய முன்னேற்ற கழக மாநில பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அடுத்த முசிறி கிராமத்தில், நாமக்கல் மாவட்ட கனரக வாகனங்கள் பாடி கட்டுமான தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பு (கிளஸ்டர்) தொடங்கு வதற்காக, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, தமிழக அரசால் நிலம் கையகப்படுத்தப்பட்டது. பின்னர், அங்கு லாரி பில்டிங் தொழில்பேட்டை அமைக்க, அடிaப்படை வசதிகள் செய்து தருவதற்காக, மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி, தார்சாலை, கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டது. இதற்காக அரசின் சார்பில் பல கோடி ரூபாய் செலவிடப்பட்டது. அதன் பின்னர், அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

Advertisement

இதுவரை அங்கு எந்த தொழில் நிறுவனங்களும் வரவில்லை. இந்நிலையில், சில நாட்களுக்கு முன், நாமக்கல் எம்.பி. மாதேஸ்வரன், தமிழக தொழில்துறை அமைச்சரை நேரில் சந்தித்து, நாமக்கல்லில் லாரி தொழில் பூங்கா அமைக்க வேண்டும் என மனு அளித்தார். முசிறி ஊராட்சியில் உள்ள இடம் எந்தவிதமான பயன்பாடும் இல்லாமல் காலியாக உள்ளதால், அந்த இடத்தில் உடனடியாக கலெக்டர் ஆய்வு செய்து, அங்கு லாரி தொழில் பூங்கா அமைப்பதற்கு அரசுக்கு பரிந்துரை செய்யவேண்டும். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட இடங்களில் தொழிற்பேட்டை துவங்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Related News