தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மாவட்ட நிர்வாகம் சார்பில் நாளை காந்தி ஸ்ேடடியத்தில் சுதந்திர தினவிழா

சேலம்: சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் நாளை காந்தி ஸ்ேடடியத்தில் சுதந்திர தினவிழா கொண்டாட்டம் நடக்கிறது. இதில், மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி கொடியேற்றி வைத்து, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார். நாடு முழுவதும் சுதந்திர விழா கொண்டாட்டம் நாளை நடக்கிறது. சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் சுதந்திர தினவிழா நடக்கிறது. இதில், மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி கலந்து கொண்டு, காலை 9.05 மணிக்கு தேசியக்கொடியினை ஏற்றி வைத்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார்.

Advertisement

பின்னர், விடுதலைப் போராட்ட வீரர்களின் வாரிசுதாரர்களைக் கௌரவித்து, பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணியாற்றியவர்களுக்கு நற்சான்றிதழ்களை வழங்குகிறார். விழழவில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, கூட்டுறவுத்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. தனைத்தொடர்ந்து பள்ளிக் கல்வித்துறையின் சார்பில், இயற்கை, மலைவளம், நாட்டுப்பற்று, செம்மொழி, இது எங்கள் பாரதம் உள்ளிட்ட பல்வேறு மையக் கருத்துக்களை வலியுறுத்தும் வகையில் சுமார் 2,000க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொள்ளும் வண்ணமிகு கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

இதனையடுத்து காந்தி ஸ்டேடியத்தில் முன்னேற்பாட்டு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அத்துடன் இன்று போலீசாரின் அணிவகுப்பு மற்றும் பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சி ஒத்திகை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, மாநகராட்சி, பள்ளிக் கல்வித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து மேற்கொண்டு வருகின்றன.

Advertisement

Related News