தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு

 

கொள்ளிடம், ஜூலை 10: கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகமாக இருப்பதால் கரையோரத்தில் மண்ணரிப்பு ஏற்பட்டு மரங்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு வருகின்றன. மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியதை தொடர்ந்து முதற்கட்டமாக கொள்ளிடம் ஆற்றில் உபரி நீர் கடந்த 30 ஆம் தேதி வெளியேற்றப்பட்டு அது கொள்ளிடம் ஆற்றின் வழியே சென்று கொள்ளிடம் அருகே பழையாறு மீன்பிடி துறைமுகத்தை ஒட்டி வங்க கடலில் சென்று கலந்தது.

அதனைத் தொடர்ந்து நேற்று முன் தினம் இரண்டாவது முறையாக கொள்ளிடம் ஆற்றில் அணைக்கரையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டது தொடர்ந்து கொள்ளிடம் ஆற்றில் நேற்று 58கும் மேற்பட்ட கன அடி நீர் சென்று கொண்டிருந்தது. இதனால் ஆற்றின் கரையோரத்தில் மிக வேகமாக மண் அரிப்பு ஏற்பட்டு வருகிறது.

இதனால் ஆற்றின் கரையை ஒட்டி உள்ள தென்னை மரங்கள் சவுக்கு மற்றும் வேம்பு உள்ளிட்ட மரங்கள் தண்ணீரில் சாய்ந்து வருகின்றன. நேற்று குத்தவக்கரை கிராமத்தில் மண் அரிப்பு ஏற்பட்டு கரையோரம் இருந்த தென்னை மரம் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது. ஆற்றின் கரையோரம் மண் அரிப்பு ஏற்படுவதால் கரையோரம் உள்ள கிராமங்களை சேர்ந்தவர்கள் ஆற்றின் கரையோர பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related News