தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

அரளி பூக்களின் வரத்து அதிகரிப்பு

சேந்தமங்கலம், ஜூலை 7: சேந்தமங்கலம் வட்டாரத்தில் உள்ள நடுக்கோம்பை, ராமநாதபுரம்புதூர், வெண்டாங்கி, வாழவந்தி கோப்பை, பள்ளம்பாறை உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவில் அரளி பூச்செடிகளை சாகுபடி செய்துள்ளனர். இப்பகுதியில் அறுவடை செய்யும் பூக்களை விவசாயிகள் சேலம், நாமக்கல், ஆத்தூர் பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கின்றனர். கொல்லிமலை அடிவார பகுதி என்பதால் பூக்கள் பெரிதாகவும், வாசனை அதிகம் இருப்பதால் பல்வேறு பகுதிகளிலிருந்து வியாபாரிகள் நேரடியாக விவசாய தோட்டங்களில் வந்து பூக்களை வாங்கி செல்கின்றனர். கடந்த சில நாட்களாக, அரளி பூக்களின் வரத்து அதிகரித்து வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு, ஒரு கிலோ ரூ.300க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. பின்னர் நாளுக்கு நாள் பூக்களின் வரத்து அதிகரித்து வருவதால், விலை படிப்படியாக குறைந்து கடந்த வாரம் கிலோ ரூ.220க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இதனால் இப்பகுதி விவசாயிகள் கவலையடைந்தனர். தற்போது விலை மெல்ல மெல்ல அதிகரித்து நேற்று ஒரு கிலோ அரளிப்பூ ரூ.360க்கு விற்பனையாகி வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ‘கடந்த சில நாட்களுக்கு முன்பு கொல்லிமலை அடிவார பகுதியில் நல்ல மழை பெய்ததால், பூக்களின் வரத்து அதிகரித்து வருகிறது. சில வாரங்களுக்கு முன்பு, பூக்களின் விலை குறைந்து வந்தது. தற்போது விலை அதிகரித்து வருவதால், விவசாயிகள் பயனடைவார்கள்,’ என்றனர்.

Related News