தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சீனி அவரைக்காய் விலை அதிகரிப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி

 

Advertisement

போடி, ஜூலை 30: சீனி அவரைக்காய் விலை அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். போடி தேவாரம் சாலையில் உள்ள சிலமலை, ராசிங்காபுரம், சமத்துவபுரம், சின்னப்பொட்டிபுரம், நாகலாபுரம், மல்லிகாபுரம், பெருமாள் கவுண்டன்பட்டி, அம்மாபட்டி என பல்வேறு பகுதிகளில் உள்ள நிலங்களில் தொடர் விவசாயம் நடந்து வருகிறது. ஆனால் நிலங்களில் உருவாக்கி வைக்கப்பட்டிருக்கும் நிலத்தடி நீர் கிடைக்கும் ஆழ்குழாய் மற்றும் கிணற்றுகளின் வாயிலாக குறுகிய கால பயிர்களான காய்கறிகள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

இதில் பெரும்பாலும் இப்பகுதிகளில் சீனி அவரைக்காய் ஒரு முறை நிலங்களில் நடப்பட்டால் 45 நாட்களில் வளர்ந்து அறுவடைக்கு வரும். அப்படியே தொடர்ந்து வாரம் ஒரு முறை அடுத்தடுத்து சீனி அவரைக்காய் 6 முறை பலனாக கிடைக்கும். சீனி அவரைக்காய் நடவு செய்தவுடன் ஒரு முறை மருந்து அடித்து அடுத்து அறுவடைக்கு வருவதற்கு முன்பாக இரண்டாம் முறையாக மருந்தடித்தும், இடையில் களையெடுப்பு உள்ளிட்டவைகள் பணிகள் செய்வதற்கு ஏக்கருக்கு 40 ஆயிரம் வரை செலவு செய்கின்றனர். தற்போது காய்கறிகள் தேவை அதிகரித்திருப்பதால் விலையும் படிப்படியாக ஏறுமுகமாக இருப்பதால் ஒரு கிலோ 45 முதல் 60 ரூபாய் வரை விற்பனையாவதால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

Advertisement

Related News