தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

மண்டபத்தில் தவறவிட்ட 25 சவரன் ஒப்படைத்த பணிப்பெண்: 4 கிராம் மோதிரம் பரிசாக வழங்கப்பட்டது

ஆவடி: சென்னை தாம்பரம் மடப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ராமகிருஷ்ணன்-மீனாட்சி தம்பதியினர் கடந்த மாதம் 27ம் தேதி ஐயபாக்கத்தில் நடந்த உறவினர் திருமணத்தில் கலந்துகொண்டனர். வீட்டிற்கு வந்து பார்த்தபோது பையில் இருந்த நகை பெட்டி மாயமானதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுதொடர்பாக திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். இதனிடையே திருமண மண்டபத்தில் வேலை செய்யும் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயமணி என்பவர் மணமகன் அறையின் கட்டிலின் கீழே இருந்து நகை பெட்டியை எடுத்து மண்டப மேலாளரிடம் ஒப்படைத்தார். இதுகுறித்து திருமுல்லைவாயில் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் நகை பெட்டியை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். மேலும் மண்டபத்தில் இருந்த சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தனர். பெட்டியில் இருந்த தங்கம் வைர நகைகளின் மதிப்பு ரூ.35 லட்சம் என தெரிகிறது.அதனைத்தொடர்ந்து நகை பெட்டியை பத்திரமாக ஒப்படைத்த ஜெயமணியின் நேர்மையை பாராட்டு அவரை ஆவடி துணை ஆணையர் அலுவலகத்திற்கு வரவழைத்து சால்வை அணிவித்து ஊக்கத்தொகை வழங்கினர். நகைகள் மீட்கப்பட்டது குறித்து ராமகிருஷ்ணன் - மீனாட்சி தம்பதிக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து காவல் துணை ஆணையர் அலுவலகம் வந்த தம்பதியினர் ஜெயமணிக்கு நன்றி தெரிவித்தனர். மேலும் 4 கிராம் மோதிரம் பரிசாக வழங்கினர்.

 

Related News