மண்டபத்தில் தவறவிட்ட 25 சவரன் ஒப்படைத்த பணிப்பெண்: 4 கிராம் மோதிரம் பரிசாக வழங்கப்பட்டது
அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் நகை பெட்டியை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். மேலும் மண்டபத்தில் இருந்த சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தனர். பெட்டியில் இருந்த தங்கம் வைர நகைகளின் மதிப்பு ரூ.35 லட்சம் என தெரிகிறது.அதனைத்தொடர்ந்து நகை பெட்டியை பத்திரமாக ஒப்படைத்த ஜெயமணியின் நேர்மையை பாராட்டு அவரை ஆவடி துணை ஆணையர் அலுவலகத்திற்கு வரவழைத்து சால்வை அணிவித்து ஊக்கத்தொகை வழங்கினர். நகைகள் மீட்கப்பட்டது குறித்து ராமகிருஷ்ணன் - மீனாட்சி தம்பதிக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து காவல் துணை ஆணையர் அலுவலகம் வந்த தம்பதியினர் ஜெயமணிக்கு நன்றி தெரிவித்தனர். மேலும் 4 கிராம் மோதிரம் பரிசாக வழங்கினர்.