தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சாலையோர வனப்பகுதியில்

 

Advertisement

சத்தியமங்கலம், ஜுலை 2: சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதி வழியாக தமிழக கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இச்சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டுனர்கள் மற்றும் பயணிகள் வனப்பகுதி சாலையில் செல்லும்போது பாலித்தீன் காகிதங்கள், பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி பாட்டில்களை சாலை ஓர வனப்பகுதியில் வீசுகின்றனர்.

யானை, மான், காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் வனப்பகுதியில் வீசப்படும் பாலிதீன் காகிதங்களை உண்ணுவதால் அவற்றிற்கு உடல் உபாதை ஏற்பட்டு உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது. மேலும் கண்ணாடி பாட்டில்களை யானை உள்ளிட்ட வனவிலங்குகள் மிதிப்பதால் காலில் காயம் ஏற்படுகிறது. வனப்பகுதி சாலையில் செல்வோர் பாலிதீன் காகிதங்கள் மற்றும் பாட்டில்களை வீசக்கூடாது என வனத்துறையினரும் ஆங்காங்கே அறிவிப்பு பலகை வைத்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று பண்ணாரி அருகே புதுக்குய்யனூர் பஸ் ஸ்டாப்பில் இருந்து திம்பம் மலை உச்சி வரை சாலையின் இருபுறமும் பாலித்தீன் காகிதங்கள் மற்றும் பாட்டில்களை சேகரிக்கும் பணி வனத்துறை சார்பில் நடைபெற்றது. இதில் வனத்துறை ஊழியர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டு பாலித்தீன், பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி பாட்டில்களை சேகரித்தனர். வனவிலங்குகளின் பாதுகாப்பு கருதி பாலித்தீன் மற்றும் பாட்டில்கள் சேகரிக்கப்பட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Advertisement

Related News