தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருப்பரங்குன்றம் லட்சுமி தீர்த்தக்குளத்தில் சென்னை ஐஐடி நிபுணர் குழுவினர் ஆய்வு

திருப்பரங்குன்றம், ஆக. 28: திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலின் உள்ளே லட்சுமி தீர்த்தகுளம் உள்ளது. சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த குளம் மிகவும் தொன்மையானது. இங்குள்ள மீன்களுக்கு பொரி வழங்கி நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மழை காலத்தில் இந்த குளத்தின் பக்கவாட்டு சுவர் சேதமடைந்தது. இந்நிலையில் பக்தர்கள் இந்த குளத்தை சீரமைக்க அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

Advertisement

இதனைத்தொடர்ந்து கடந்த ஆண்டு லட்சுமி தீர்த்த குளத்தை சீரமைக்க தமிழ்நாடு அரசு ரூ.6.5 கோடி ஒதுக்கியது. இதனைத்தொடர்ந்து கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14 ம் தேதி இந்த குளத்தை சீரமைக்க பூமி பூஜை துவங்கி பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் இந்த குளத்தை ஒட்டிய பகுதியில் விநாயகர் கோயில் உள்ளது. மேலும் அதனருகில் நூற்றாண்டு பழைமையான மண்டபமும் உள்ளது. தற்போது சீரமைப்பு பணிகளின் போது பழமை மாறாமல் புதிய தொழில்நுட்பத்துடன் சுவர் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக நேற்று சென்னை ஐஐடி பேராசிரியர் டாக்டர் அழகு மூர்த்தி தலைமையில் நிபுணர் குழு லட்சுமி தீர்த்த குளத்தின் மேற்குப் பகுதியில் உள்ள சுவற்றின் அருகில் உள்ள விநாயகர் கோயில் பகுதியை நேரில் ஆய்வு செய்து பார்வையிட்டு, பழமை மாறாமல் புதிய தொழில்நுட்பம் கொண்டு கட்டிடத்தை கட்டி முடிக்க தேவையான வழிமுறைகளை ஆராய்ந்தனர். அப்போது மண்டல உதவிகோட்ட பொறியாளர் மற்றும் கோயில் இளநிலை பொறியாளர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Advertisement

Related News