தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஐஎப்எஸ் நிதிநிறுவன ஏஜென்ட் தூக்கிட்டு தற்கொலை வேலூரில் நிதி நிறுவன மோசடியால் விரக்தி

வேலூர், ஜூலை 9: வேலூரில் ஐஎப்எஸ் நிதி நிறுவன மோசடியால் விரக்தியடைந்த அந்நிறுவன ஏஜென்ட் விரக்தியடைந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வேலூர் சத்துவாச்சாரி பகுதி-3 டபுள்ரோட்டை சேர்ந்தவர் எஸ்.முகிலன்(47). இவர் அமேசான் பழைய பொருட்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு ஐஎப்எஸ் நிதி நிறுவன ஏஜென்டாகவும் இருந்து வந்தார். அப்போது சத்துவாச்சாரி, ரங்காபுரம் உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களிடம் இருந்து ஐஎப்எஸ் நிதி நிறுவனத்துக்கு டெபாசிட்டாக பணம் பெற்றாராம்.

Advertisement

இந்நிலையில் மோசடியில் சிக்கிய நிதி நிறுவனம் மூடப்பட்டது. அந்நிறுவனம் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வரும் நிலையில் இவர் மூலம் நிதிநிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் முகிலனிடம் பணத்தை திரும்ப கேட்டு தொல்லை கொடுத்து வந்தததாக தெரிகிறது. இதனால் சில மாதங்களுக்கு முன்பு அவர் தலைமறைவானார். இந்த நிலையில் குடும்பத்தினரை பார்க்க வேண்டும் என்ற ஆவலில் நேற்று முன்தினம் வீடு திரும்பியுள்ளார். இதையறிந்த முதலீட்டாளர்கள் மீண்டும் போன் மூலம் தொடர்பு கொண்டு, தாங்கள் முதலீடு செய்த பணத்தை திரும்ப கேட்டு தொல்லை கொடுத்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று காலை கடைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் நீண்டநேரமாகியும் வராததால் சந்தேகமடைந்த அவரது மனைவி கடைக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது முகிலன் தூக்கில் சடலமாக தொங்கிக் கொண்டிருந்துள்ளார். இதனால் அவரது மனைவியின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்தவர்கள் சத்துவாச்சாரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த சத்துவாச்சாரி போலீசார் முகிலன் சடலத்தை கைப்பற்றி அரசினர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Related News