தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கிணற்றில் மூழ்கி கணவன், மனைவி பலி போளூர் அருகே சோகம் ஆட்டுக்குட்டியை காப்பாற்ற முயன்றபோது

போளூர், மார்ச் 12: போளூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த ஆட்டுக்குட்டியை காப்பாற்ற முயன்ற கணவன், மனைவி நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த பெரியகரம் ஊராட்சிக்கு உட்பட்ட மதுரா காந்தி பகுதியை சேர்ந்தவர் சேகர் மகன் குமார்(30), விவசாயி. இவரது மனைவி வளர்மதி(27). இவர்களது மகன்கள் சசிபிரசாத்(9), பிரகாஷ்(7). சொந்த நிலத்தில் வீடு கட்டி வசித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று இவர்களது ஆட்டுக்குட்டி நிலத்தில் மேய்ந்து கொண்டிருந்தபோது திடீரென அங்குள்ள விவசாய கிணற்றில் தவறி விழுந்தது. இதை பார்த்த குமாரின் மனைவி வளர்மதி ஆட்டுக்குட்டியை காப்பாற்ற கிணற்றில் குதித்தார். மனைவி கிணற்றில் குதிப்பதை பார்த்த குமாரும் விரைந்து வந்து கிணற்றில் குதித்து மீட்க முயன்றார்.

Advertisement

ஆனால், கிணற்றில் குதித்ததில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு நீரில் மூழ்கி இறந்தனர். அப்பகுதி மக்கள் இருவரது சடலங்களையும் மீட்டு மேலே கொண்டு வந்தனர். மேலும், போளூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து குமாரின் தாயார் கண்ணகி கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ேஹமாவதி, சப்- இன்ஸ்பெக்டர் கருணாகரன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். கிணற்றில் விழுந்த ஆட்டை காப்பாற்ற முயன்றபோது நீரில் மூழ்கி கணவன், மனைவி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Related News