தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ஆலங்குடி அரசு கல்லூரியில் மனித உரிமை, கேலிவதை, போக்சோ விழிப்புணர்வு

 

புதுக்கோட்டை, ஜூலை 5: ஆலங்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கான ஆறு நாட்கள் புத்தொளிப் பயிற்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இப்பயிற்சியில், ஐந்தாம் நாளில் மாணவ மாணவிகளுக்கு போக்சோ, மனித உரிமை மற்றும் கேலிவதை போன்ற சட்ட விழிப்புணர்வு வழங்கப்பட்டது. தமிழக அரசின் உயர்கல்வித்துறையின் வழிகாட்டுதலின்படி மாணாக்கர்களுக்கான புத்தொளிப்பயிற்சி கடந்த ஐந்து நாட்களாக நடைபெற்றுவருகிறது. இதில், 4 ஆலங்குடி வட்ட சட்டப்பணிகள் குழுவால் ஒருங்கிணைக்கப்பட்ட ஆலங்குடி நீதிமன்ற பேனல் அட்வகேட் மாலதி மனித உரிமைகள் மற்றும் கேலிவதை குறித்த சட்ட வரைவுகளை விளக்கி மாணவர்களுக்கு சிறந்த அறிவுரைகளை எடுத்துரைத்தார்.

மேலும், வனஜா மாணவ மாணவிகளுக்கு போக்சோ சட்டத்தின் சிறப்புகள் மற்றும் அதுகுறித்த விழிப்புணர்வை திறம்பட எடுத்துரைத்தார். இவ்விழாவிற்கு, கல்லூரியின் முதல்வர் முனைவர் ஜானகி தலைமை தாங்கி மாணவர்களுக்கு புத்தொளிப் பயிற்சியின் நன்மைகள் குறித்து எடுத்துரைத்தார். மேலும், கணிதவியல் துறைத் தலைவர் முனைவர் அர்ச்சுனன் வாழ்த்துரையும் ஆங்கிலத்துறைத் தலைவர்மணிகண்டன் அறிமுகவுரையும், வணிகவியல் துறைத் தலைவர் முனைவர் பார்வதி வரவேற்புரையும் வழங்கினார். மேலும், இவ்விழாவிற்கு ஆலங்குடி வட்ட சட்டப்பணிகள் குழு தன்னார்வ சட்டப் பணியாளர் செந்தில்ராஜா கலந்துகொண்டு கேலிவதை மற்றும் சட்ட உதவி சார்ந்த துண்டுப் பிரச்சுரங்களை மாணவர்களுக்கு வழங்கினார்.