தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மதுராந்தகம் புறவழி சாலையில் கார் மீது ஆம்னி பேருந்து மோதி பயங்கர விபத்து: போக்குவரத்து கடும் பாதிப்பு

மதுராந்தகம், ஜூன் 6: மதுராந்தகம் புறவழி சாலையில் கார் மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் அதிர்ஷ்டவசமாக அனைவரும் உயிர் தப்பினர். இந்த விபத்த காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மதுராந்தகம் புறவழி சாலையில், திருச்சியில் இருந்து சென்னை செல்லும் மார்க்கத்தில் நேற்று காலை புதுச்சேரியில் இருந்து 3 பேர் காரில் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது, அந்த காருக்கு பின்னால் திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த தனியார் ஆம்னி பேருந்து வேகமாக மோதியது. இதில், காரின் பின்பகுதி பலத்த சேதமடைந்து, ஜிஎஸ்டி சாலையின் நடுவில் நின்றது. விபத்தை பார்த்ததும் அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து, காரின் பின்பக்க இடிபாடுகளில் சிக்கியிருந்த 2 பேரையும் பத்திரமாக மீட்டனர்.

Advertisement

டிரைவர் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். ஆம்னி பேருந்தில் இருந்த பயணிகளுக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை. இதனால் திருச்சி-சென்னை செல்லும் ஜிஎஸ்டி சாலை மார்க்கத்தில் வாகன நெரிசல் அதிகமாகி, சுமார் அரைமணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதில் வேலைக்கு செல்பவர்களும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். தகவலறிந்து மதுராந்கதம் போலீசார் விரைந்து வந்து காரை கிரேன் மூலம் அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய தனியார் ஆம்னி பேருந்து டிரைவரிடம் விசாரித்து வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

Advertisement