தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வேலூர் மாவட்டத்தில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் கட்டாயம்: முக்கிய இடங்களில் போலீசார் சோதனை

வேலூர், டிச.3: வேலூர் மாவட்டத்தில் நேற்று முதல் வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் போலீசார் முக்கிய இடங்களில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு ஹெல்மெட் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்தனர். வேலூர் மாவட்டத்தில் டிசம்பர் 1ம் தேதி முதல் ஹெல்மெட் கட்டாயம் என்று காவல்துறை அறிவித்திருந்தது. மேலும் ஹெல்மெட் அணியாதவர்களுக்கு ₹1,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிப்பில் குறிப்பிட்டிருந்தது. ஆனால் பெஞ்சல் புயல் மழை காரணமாக நேற்று 1ம் தேதி மாவட்டத்தில் எங்கும் காவல்துறை ஹெல்மெட் கட்டாய விதியை கண்காணிக்காமல் தவிர்த்தனர். அதே நேரத்தில் புயல் மழை காரணமாக ஹெல்மெட் சோதனை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மாவட்டம் முழுவதும் தகவல் பரவியது.

Advertisement

ஆனால் நேற்று காலை டிசம்பர் 2ம் தேதி முதல் வேலூர் மாவட்டத்தில் இதற்காக தனி குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு அபராதம் விதிக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் ஏஎன்பிஆர் கேமரா எனப்படும் ஆட்டோமேடிக் நம்பர் பிளேட் ரெககனைஸ் கேமரா மூலம் போட்டோ எடுக்கப்பட்டு அதன் மூலம் அபராதம் விதிக்கும் பணியும் நடந்தது. வேலூரில் வேலூர் செல்லியம்மன் கோயில், புதிய பஸ் நிலையம், அருகிலும் காட்பாடி சித்தூர் பஸ் நிறுத்தம், குடியாத்தம் கூட்ரோடு, அண்ணா சாலை என முக்கிய இடங்களில் வாகன சோதனை நடந்து வருகிறது. இதில் ஹெல்மட் அணியாத வாகன ஓட்டிகளுக்கு ₹1,000 அபராதம் விதிக்கப்படுகிறது. இதுகுறித்து எஸ்பி மதிவாணனிடம் கேட்டபோது, ‘ஹெல்மெட் கட்டாயம் என்ற விதி (இன்று) நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதற்காக தனி டீம்கள் அமைக்கப்பட்டுள்ளன’ என்று தெரிவித்தார்.

Advertisement