தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பல்லடத்தில் தலைக்கவச விழிப்புணர்வு பேரணி

பல்லடம், ஜன.23: பல்லடத்தில் நெடுஞ்சாலை துறை சார்பில் தேசிய சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி தலைக்கவசம் அவசியம் பற்றிய விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. பேரணியை உதவிக் கோட்டப் பொறியாளர் செந்தில்அரசு தொடங்கி வைத்தார். இதில் உதவிப் பொறியாளர் ஜான்சி, நெடுஞ்சாலை துறை உதவியாளர்கள், சாலைப்பணியாளர்கள், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு, சப்-இன்ஸ்பெக்டர்கள் அன்புராஜ், பார்த்திபன் மற்றும் போக்குவரத்து போலீசார் கலந்து கொண்டனர். பேரணியானது நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் தொடங்கி தாராபுரம் சாலை, பனப்பாளையம் விவேகானந்தா பள்ளி, அரசு மருத்துவமனை,

Advertisement

பேருந்து நிலையம் வழியாக வந்து நிறைவடைந்தது.போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு கூறுகையில், ‘‘வாகன விபத்தில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள இருசக்கர வாகன ஓட்டிகள் மட்டுமின்றி, வாகனத்தில் பின்புறம் அமர்ந்திருப்பவரும் தலைக்கவசம் அணிவது மிக அவசியம் ஆகும். மேலும், விபத்து ஏற்படும் போது தலைக்கவசம் அணிந்திருந்தால் தலைப்பகுதியில் ஏற்படும் மோசமான பாதிப்புகள் தவிர்க்கப்படும்’’ என்றார். பல்லடம் நான்குசாலை சந்திப்பு சிக்னலில் காத்திருக்கும் வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

Advertisement