சென்னையில் இரவில் கொட்டி தீர்த்த மழை
Advertisement
இந்நிலையில் நேற்று இரவு 9 மணியளவில் சென்னையில் நுங்கம்பாக்கம், மயிலாப்பூர், கோடம்பாக்கம், வள்ளுவர் கோட்டம், தி.நகர், சூளைமேடு, கோயம்பேடு, வடபழனி, விருகம்பாக்கம், வளசரவாக்கம், போரூர், குன்றத்தூர், கிண்டி, பூந்தமல்லி, பாரிமுனை, சென்ட்ரல், எழும்பூர், வேளச்சேரி, திருவான்மியூர், கொட்டிவாக்கம், புரசைவாக்கம் போன்ற பகுதிகளில் 1 மணி நேரத்திற்கும் மேலாக மழை கொட்டித் தீர்த்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அதேபோல், சென்னையின் புறநகர் பகுதியான தாம்பரம் மற்றும் அதைச் சுற்றிய பகுதிகளிலும் கனமழை பெய்தது. இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இதமான சூழ்நிலை நிலவியது.
Advertisement