தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பல்லடத்தில் கடும் போக்குவரத்து நெரிசல்

 

Advertisement

பல்லடம், மார்ச் 10: பல்லடம் நகரமானது கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. மேலும் இப்பகுதியில் திருப்பூர், பொள்ளாச்சி, உடுமலை, அவினாசி, தாராபுரம் ஆகிய மாநில நெடுஞ்சாலைகள் இணைவதால் பல்லடத்தில் வாகன போக்குவரத்து பல மடங்கு அதிகரித்து வருகிறது. திருமணம் போன்ற விஷேச நாட்களில் கிலோ மீட்டர் கணக்கில் வாகனங்கள் வரிசை கட்டி நிற்பது வழக்கமாகிவிட்டது. இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை சுப முகூர்த்த நாள் என்பதால் பல்லடத்தில் கார், மோட்டார் சைக்கிள்களின் எண்ணிக்கை வழக்கத்தை விட பல மடங்கு அதிகரித்தது.

இதனால் கோவை-திருச்சி ரோட்டிலும், மங்கலம் ரோட்டிலும், பொள்ளாச்சி ரோட்டிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் வரிசையாக அணிவகுத்து சென்றன. போக்குவரத்து போலீசார் நெரிசலை கட்டுப்படுத்த தடுப்புகள் வைத்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். இருந்த போதிலும் கட்டுக்கடங்காத வாகனப் போக்குவரத்தால், வாகனங்கள் ஊர்ந்து சென்றது. போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போலீசார் திணறினர். பல்லடத்தில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மேம்பாலம் கட்ட வேண்டும் அல்லது புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Advertisement