தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வார விடுமுறையையொட்டி வெளியூர் பயணம் பரனூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல்: 1 கிமீ தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன

செங்கல்பட்டு, ஜூலை 21: தொடர் விசேஷங்களையொட்டி ஏராளமான பொதுமக்கள் வெளியூர் பயணம் மேற்கொண்டதால் பரனூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 1 கிமீ தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். வார விடுமுறை, பவுர்ணமி மற்றும் ஆடி மாத முதல் ஞாயிறு என தொடர் விசேஷங்களை முன்னிட்டு சென்னையில் இருந்து தென் மாவட்டத்திற்கு ஏராளமான பொதுமக்கள் நேற்று முன்தினம் இரவு முதலே கார், ஆம்னி பேருந்துகள், அரசுப் பேருந்துகளில் பயணம் மேற்கொண்டனர். இதன் காரணமாக செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Advertisement

இந்நிலையில், பவுர்ணமியையொட்டி சென்னையில் இருந்து ஏராளமான பொதுமக்கள் திருவண்ணாமலை கிரிவலத்திற்குச் சென்றதால் நேற்று பரனூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து மேலும் அதிகரித்து கடும் நெரிசல் ஏற்பட்டது. இதனால், பரனூர் சுங்கச்சாவடி வழியாக சென்ற வாகனங்கள் ஆமை வேகத்தில் ஊர்ந்தபடி சென்றன. சுமார் 1 கி.மீ. தூரத்திற்கு சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் வரிசை கட்டி நின்றன. இதனால், சுங்கச்சாவடியைக் கடக்க 30 நிமிடங்களுக்கு மேலானதால் வாகன ஓட்டிகள் நெரிசலில் சிக்கித் தவித்தனர். வாரவிடுமுறை மற்றும் பண்டிகை விசேஷ நாட்களில் பரனூர் சுங்கச்சாவடியில் கூடுதல் கவுன்டர்கள் திறக்க வேண்டும், என்று வாகன ஓட்டிகள் நீண்டநாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Advertisement

Related News