தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருமூர்த்திமலையில் கனமழையால் மலைவாழ் மக்கள் பாதிப்பு

உடுமலை, அக்.26: உடுமலை அருகே உள்ள திருமூர்த்திமலையில் அமணலிங்கேஸ்வரர் கோயில் உள்ளது. பஞ்சலிங்க அருவியும் உள்ளது. தினசரி ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் இங்கு வருகின்றனர். விசேஷ தினங்கள் மற்றும் விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். அமணலிங்கேஸ்வரர் கோயில் பகுதியில் மழைவாழ் மக்கள் பலர் கடை வைத்துள்ளனர். நெல்லிக்காய்,மாங்காய், தேன் உள்ளிட்ட மலைகளில் கிடைக்கும் பொருட்கள் மற்றும் கோயில் பூஜைக்கு தேவையான பொருட்களையும் விற்பனை செய்து வருகின்றனர்.

Advertisement

இந்நிலையில், திருமூர்த்திமலையில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பஞ்சலிங்க அருவியில் அதிக தண்ணீர் விழுவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. கோயிலுக்கு வழிபாடு நடத்த மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர். கனமழை காரணமாக மலைவாழ் மக்கள் கடை வைத்துள்ள பகுதியில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் அவர்கள் கடை நடத்த முடியவில்லை. சுற்றுலா பயணிகள் வருகையும் குறைவாக உள்ளதால் அவர்கள் வியாபாரமின்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

Related News