தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குமரியில் மீண்டும் சாரல் மழை

நாகர்கோவில், ஜூன் 19 : கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தி வந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை முதல் மீண்டும் சாரல் மழை பெய்ய தொடங்கியுள்ளது. நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மதியம் வரை திடீர் திடீரென்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதும் மழை பொழிவதுமாக இருந்தது. பின்னர் வெயில் கொளுத்தியது. மாவட்டத்தில் நேற்று காலை வரை அதிகபட்சமாக முள்ளங்கினாவிளையில் 14.4 மி.மீ மழை பெய்திருந்தது. தக்கலையில் 5.2 மி.மீ, பேச்சிப்பாறை 4.6 மி.மீட்டரும் மழை பெய்திருந்தது. பூதப்பாண்டி, முக்கடல், குழித்துறை, ஆனைக்கிடங்கு உள்ளிட்ட இடங்களிலும் லேசான மழை பதிவாகி இருந்தது.

Advertisement

மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 44.55 அடியாக இருந்தது. அணைக்கு 447 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. 632 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது. பெருஞ்சாணி நீர்மட்டம் 69.25 அடியாகும். அணைக்கு 178 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. சிற்றார்-1ல் 16.14 அடியாக நீர்மட்டம் காணப்பட்டது. அணைக்கு 107 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்தது. 150 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. சிற்றார்-2ல் 16.24 அடியாக நீர்மட்டம் உள்ளது. பொய்கையில் 15.9 அடியும், மாம்பழத்துறையாறு அணையில் 40.27 அடியும் நீர்மட்டம் உள்ளது. முக்கடல் அணையின் நீர்மட்டம் 17.8 அடியாகும்.

Advertisement

Related News