தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருத்தணி பகுதியில் இடி மின்னலுடன் கனமழை

திருத்தணி, மே 21: திருத்தணி பகுதியில் நேற்று இடி மின்னலுடன் பெய்த கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருத்தணி, பள்ளிப்பட்டு, திருவாலங்காடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைத்தது. பகல் நேரங்களில் வெப்ப சலனமும், இரவில் புழுக்கமும் ஏற்பட்டு சிறுவர்கள் முதல் முதியோர் வரை அனைத்து தரப்பு மக்களும் பெரும் பாதிப்படைந்து வந்தனர். தற்ேபாது, கோடை வெயிலின் உச்சகட்ட வெப்பமாக கத்திரி வெயில் தொடங்கிய நாள் முதல் 4 நாட்களாக மிதமான கோடை மழை பெய்து வருகிறது.

Advertisement

அந்த வகையில், நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், மாலையில் திடீரென்று இடி மின்னலுடன் சுமார் 2 மணி நேரம் மழை கொட்டியது. திருத்தணி பகுதியில் நேற்று 56 மிமீ மழை பதிவாகியுள்ளது.

இதனால், திருத்தணி நகரில் தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், வாகனங்கள் முகப்பு விளக்கு எரியவிட்டபடி மெதுவாக சென்றன. மேலும், சாலையோர வியாபாரிகள் மற்றும் பயணிகள் அவதி அடைந்தனர். கோடை வெயிலால் அவதிப்பட்ட நிலையில், சில நாட்களாக பெய்து வரும் மழையால், வெப்பம் குறைந்து சில்லென்று காற்று வீசுவதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். திருவாலங்காடு, பள்ளிப்பட்டு சுற்றுவட்டார பகுதிகளிலும் கனமழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இடி விழுந்ததில் கோயில் கலசம் சேதம்

ஆவடி கோவர்த்தனகிரி நகர் அருகே கலைஞர் நகர் 1வது தெருவில்  முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோவிலைச் சுற்றி சுமார் 100ம் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று ஆவடி பகுதியில் இடி மின்னலுடன் கனமழை கொட்டியது. மாலை 7.20 மணியளவில் மேற்கூறிய முத்து மாரியம்மன் கோயில் கலசத்தில் பலத்த சத்தத்துடன் சக்தி வாய்ந்த இடி விழுந்தது. அப்போது நெருப்புப் பொறிகள் பறந்தன. இதனால் கோபுர கலசம் இடிந்து விழுந்தது. பயங்கர சத்தம் கேட்டு அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அச்சமடைந்தனர். இடி விழுந்ததில் அப்பகுதியில் உள்ள 10க்கும் மேற்பட்ட வீடுகளில் டிவி, மிக்ஸி, பேன், பிரிட்ஜ், வாஷிங் மிஷின் போன்ற மின்சாதன பொருட்கள் பழுதாகின.

Advertisement