தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

சூறைக்காற்றுடன் பலத்த மழை

 

தேன்கனிக்கோட்டை, ஜூலை 14: தேன்கனிக்கோட்டை அருகே, பாலதோட்டனப்பள்ளி பகுதியில் பலத்த மழை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, சூளகிரி தாலுகாவில் மானாவரி பயிர்களான ராகி, நிலக்கடலை, எள், சாமை, துவரை உள்ளிட்டவை அதிகமாக பயிரிடப்படுகிறது. கடந்த மே மாதம் முழுவதும் கேடை மழை பெய்ததால் வெயில் தாக்கம் குறைந்தது. இதனால் சீதோஷ்ண நிலை மாறியது. மேலும் தென்மேற்கு பருவ மழை தொடங்கும் முன்பே மே மாதத்தில் நல்ல மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்சியுடன் உழவு பணிகளை மேற்கொண்டனர். இந்த மழையை பயன்படுத்தி எள், துவரை விதைத்தனர்.

இந்நிலையில் ஜூன் மாதம் முதல் தற்போது வரை கடந்த ஒன்றரை மாதமாக தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, தளி பகுதியில் மழை பெய்யாததால் எள், துவரை பயிர்கள் கருகி வருகின்றன.

மேலும் ஜூன் மாத தொடக்கத்தில் இருந்து தென்மேற்கு மழையை எதிர்நோக்கி, சில பகுதிகளில் நிலக்கடலை விதைத்து விவசாயிகள் காத்து கிடந்தனர். இந்நிலையில், நேற்று மாலை 5.30 மணி அளவில் பாலதோட்டனப்பள்ளி, காரண்டப்பள்ளி, அகலக்கோட்டை, கச்சுவாடி, குண்டாலம், ஜவளகிரி வனப்பகுதியையொட்டி பலத்த மழை பெய்தது. இதனால் நிலக்கடலை விதைத்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.