தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பந்தலூரில் கன மழைக்கு பயணிகள் நிழற்குடை இடிந்து தரை மட்டம் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்ப்பு

 

Advertisement

பந்தலூர், மே 31: பந்தலூரில் கனமழைக்கு அத்திமாநகர் பகுதியில் உள்ள பயணிகள் நிழற்குடை தரைமட்டமானது. நீலகிரி மாவட்டம், பந்தலூர் சுற்றுவட்டாரம் பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. காற்றுடன் கூடிய கனமழை நீடிப்பதால் பல இடங்களில் மண்சரிவு மற்றும் மரங்கள் சாய்ந்தும் மின்சாரம் துண்டித்துள்ள நிலையில் போர்கால அடிப்படையில் மின்வாரியத்தினர் மற்றும் அனைத்துத்துறை அதிகாரிகள் சீரமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்று பந்தலூரில் 65 மிமீ, சேரம்பாடியில் 52 மிமீ மழையும் பதிவாகியுள்ளது.

இந்நிலையில் பந்தலூர் அருகே அத்தி மாநகர் பகுதியில் உள்ள பயணிகள் நிழற்குடை நேற்று முன்தினம் பெய்த மழைக்கு இடிந்து தரைமட்டமானது. இரவு நேரம் என்பதால் மக்கள் நடமாட்டம் எதுவும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது, மேலும் பந்தலூர் அருகே நெலாக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட விலங்கூர் பகுதியில் நூற்றுக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு செல்லும் தார்சாலையில் மழைநீர் சூழ்ந்து மக்கள் நடமாட முடியாமல் இருந்து வருகிறது. சாலையில் சூழ்ந்துள்ள மழைநீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கனமழை மற்றும் சூறைக்காற்றுக்கு நெலாக்கோட்டை பஜார் பகுதியில் சாலையோரத்தில் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் நரிக்கொல்லியில் இருந்து நம்பியார்குன்னு செல்லும் சாலையில் மரம் விழுந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தொடர்ந்து, கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் வெளியில் செல்லாமல் வீட்டில் முடங்கினர்.

Advertisement

Related News