ஒரு மணி நேரம் கொட்டித்தீர்த்த கன மழை செய்யாறு சுற்றுவட்டார பகுதிகளில்
செய்யாறு, நவ.14: செய்யாறு சுற்று வட்டார பகுதிகளான செய்யாறு நகரிலும் தூளி, பைங்கினர், வட தண்டலம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்தது, கடந்த சில நாட்களாக தமிழகத்தில் தென்மேற்கு வங்கக் கடலில் உருவான புயல் சின்னம் காரணமாக கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்து வந்தது. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் விட்டு விட்டு சாரல் மழையாக துவங்கி கனமழை 1 மணி நேரம் மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதமான சூழலால் குளிர்ச்சியான காற்று நிலவி வருகிறது.
Advertisement
Advertisement