தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தோகைமலை ஒன்றிய பகுதிகளில் 1 மணிநேரம் பலத்த மழை

 

Advertisement

தோகைமலை, செப்.28: கரூர் மாவட்டம், தோகைமலை ஒன்றிய பகுதிகளில் நேற்றிரவு 9.30 மணி அளவில் ஒரு மணிநேரம் பலத்த மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. இந்த மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். கரூர் மாவட்டம் தோகைமலை ஒன்றிய பகுதிகளில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மழை பெய்தது. அதனைத் தொடர்ந்து மீண்டும் கோடை வெயில் போல் அனைத்து பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தனர். மேலும் பருவ மழையை எதிர்பார்த்து விவசாயிகள் மானாவரி சாகுபடியை ஏற்கனவே தொடங்கினர்.

இதில் எள், கடலை, துவரை போன்ற பல்வேறு மானாவாரி பயிர்களை விதைக்கத் தொடங்கினர். இதேபோல் தற்போது சம்பா சாகுபடிக்கான நடவு பணிகளும் பருவ மழையை எதிர்நோக்கி விவசாயிகள் தீவிரமாக நடவு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் விவசாயிகள் எதிர்பார்த்தபடி மழை பெய்யவில்லை தொடர்ந்து வெயில் கொளுத்தியது. மழையை இந்த நிலையில் நேற்றிரவு 9.30 மணியளவில் தோகைமலை உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது, இதனை அடுத்து வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. மேலும் மானாவரி சாகுபடியில் ஈடுபட்ட விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Advertisement