தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கேட்பாரற்று நின்ற காரில் குட்கா மீட்பு

பாலக்கோடு, ஜூன் 19: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே கல்கூடப்பட்டி தேசிய நெடுஞ்சாலையோரம், கர்நாடக பதிவெண் கொண்ட சொகுசு கார், கேட்பாரற்று நீண்ட நேரம் நின்று கொண்டிருப்பதாக, அப்பகுதியினர் நேற்று முன்தினம் இரவு பாலக்கோடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், சொகுசு காரை கைப்பற்றினர். காரின் கதவை திறந்து பார்த்த போது, அதில் ஒரு மூட்டையில் இரண்டரை கிலோ குட்கா பொருட்கள் இருந்தது. விசாரணையில், கர்நாடகா மாநிலம் பெங்களுருவிலிருந்து மூட்டை மூட்டையாக குட்கா பொருட்களை மர்ம நபர்கள் காரில் கடத்தி வந்துள்ளனர். கல்கூடப்பட்டி அருகே கார் பழுதானதால், வேறு வாகனத்தில் அவசர அவசரமாக குட்கா மூட்டைகளை மாற்றி எடுத்து சென்றது தெரிய வந்தது. இதையடுத்து கார் மற்றும் குட்காவை போலீசார் பறிமுதல் செய்து, காரின் உரிமையாளர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement

Related News