தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குடமுருட்டியில் குருபூஜை விழா

 

Advertisement

கமுதி, ஜூலை 18: கமுதி அருகே குடமுருட்டி சாது சுவாமிகள் 34ம் ஆண்டு குருபூஜை விழா நடைபெற்றது. கமுதி அடுத்த அபிராமம் குடமுருட்டியில் ஸ்ரீமத் சாது சுவாமிகள் ஜீவசமாதி அமைந்துள்ளது. கமுதி, அபிராமம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் பெரும்பாலானோர் இந்த சாது சுவாமிகள் ஜீவசமாதி திருக்கோயிலில் இருந்து துளசி மாலை அணிந்து விரதமிருந்து, சபரிமலைக்கு செல்வது வழக்கம். இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் அவரது நினைவு நாளில் குருபூஜை விழா அனுசரிக்கப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஜீவசமாதி திருக்கோயில் இந்து சமயஅறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது.

இதனைத் தொடர்ந்து முதுகுளத்தூர் சரக அறநிலையத்துறை ஆய்வாளர் உதயக்குமார், கோயில் அறங்காவலர் முருகன், கமுதி வட்டாட்சியர் காதர்முகைதீன் ஆகியோர் முன்னிலையில், சாது சுவாமிகளின் படத்திற்கு மாலை அணிவித்து, அங்குள்ள சிவலிங்கத்திற்கு 16 வகையான அபிஷேகம், ஆராதனை, குருபூஜை விழா நடைபெற்றது. விழாவில் எம்எல்ஏ முருகேசன் கலந்து கொண்டு அன்னதானத்தை துவக்கி வைத்தார். இதில் திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் வாசுதேவன், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் சுப்புராயலு, குருசாமி ராமதாஸ் , ஊராட்சி தலைவர் காவடி முருகன் உள்பட பலர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Advertisement