தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கூலி தொழிலாளியிடம் மிரட்டி பணம் பறித்தரவுடி மீது குண்டாஸ்

திருச்சி, மே 20: கூலி தொழிலாளியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த ரவுடி குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். திருச்சியில் கடந்த ஏப்.24ம் தேதி பாலக்கரை போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட எடத்தெரு அண்ணா சிலை அருகில் நடந்து சென்ற கூலி தொழிலாளியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்ததாக பாலக்கரை போலீசார் வழக்கு பதிந்தனர். புகாரின்போில் மேற்கொண்ட விசாரணையில் சம்பவத்தில் ஈடுபட்ட பாலக்கரை கீழபுதூரை சோ்ந்த ரவுடி விஜய்பாபு (26) என்பவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisement

தொடர்ந்து ரவுடி விஜய்பாபு குறித்து போலீசார் நடத்திய மேல் விசாரணையில், விஜய்பாபு மீது 13 வழக்குகள் நிலுவையில் இருப்பது தொியவந்தது. எனவே ரவுடி விஜய்பாபுவின் தொடா் குற்ற நடவடிக்கையை தடுக்கும் வகையில் பாலக்கரை இன்ஸ்பெக்டர் மாநகர போலீஸ் கமிஷனருக்கு அறிக்கை தாக்கல் செய்தார். அறிக்கையை ஆய்வு செய்த மாநகர போலீஸ் கமிஷனர் காமினி, விஜய்பாபுவை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து போலீசார் விஜய்பாபு மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், அதற்கான ஆணையை சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் விஜய்பாபுவிடம் சார்வு செய்தனர்.

Advertisement

Related News