தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் கைதான 3 பேர் மீது குண்டாஸ்

 

ஈரோடு, ஜூலை 14: ஈரோடு மாவட்டம், கோபி, கலிங்கியம், கோட்டுபுள்ளாம்பாளையம் பகுதியில் ரேஷன் அரிசியை விற்பனைக்காக கார் மற்றும் வேனில் கடத்தி வந்த கோபி, ராம்நகரை சேர்ந்த அப்துல்லா (45), அதேபகுதி பகுதியை சேர்ந்த நவநீதகிருஷ்ணன் (39), கோவை பாப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த அபி (எ) அபிலாஷ் (35) ஆகியோரை கடந்த ஜூன் 23ம் தேதி, மாவட்ட குடிமை பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்து, ஈரோட்டில் உள்ள கிளை சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து 5.01 டன் ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் வேனையும் பறிமுதல் செய்தனர்.

தொடர் ரேஷன் அரிசி பதுக்கல் மற்றும் கடத்தலில் ஈடுபட்ட மூவரையும் குண்டர் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க குடிமைப் பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரைத்தனர். இதனை ஏற்ற கலெக்டர் கந்தசாமி, ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட அப்துல்லா, நவநீதகிருஷ்ணன், அபிலாஷ் ஆகிய மூவரையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்பேரில், ஈரோடு சிறையில் இருந்த 3 பேரும், போலீஸ் பாதுகாப்புடன் கோவை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

Related News